பாடசாலைக் கீதம்
பல்லவி
சல்லி அம்பாள் பாடசாலை வாழ்கவே
முத்தமிழ் தழைத்து நித்தம் ஓங்கவே
அனுபல்லவி
சல்லி நகர் தன்னில் இன்பக் கலைகளால் - என்றும்
மனம் நிறைந்த கல்வி நிலை மிளிர்கவே
சரணம்
நற்கலைகள் நாமகளின் அருளோடு - என்றும்
கற்றுக்கலை தாயவளை வணங்குவோம்
பற்றுதலாய் உற்றுநோக்கி நித்தமும் - என்றும்
வற்றவிடா முயற்சியோடு தொடருவோம்.